Unnamed: 0 int64 0 1.34k | Book stringclasses 75
values | Chapter stringlengths 25 48 | Content stringlengths 252 17.1k ⌀ | Url stringlengths 47 62 |
|---|---|---|---|---|
0 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 1 – திருவிவிலியம் | கடவுள் உலகைப் படைத்தல்
1 தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது,
2 மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.
3 அப்பொழுது கடவுள், “ஒளி தோன்றுக!” என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார்.
4 கடவுள... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-1 |
1 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 2 – திருவிவிலியம் | 1 விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின.
2 மேலும், கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச்செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
3 கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில், கடவுள்... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-2 |
2 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 3 – திருவிவிலியம் | மனிதனின் கீழ்ப்படியாமை
1 ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், “கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?” என்று கேட்டது.
2 பெண் பாம்பிடம், “தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம்.
3 ஆன... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-3 |
3 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 4 – திருவிவிலியம் | காயினும் ஆபேலும்
1 ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள் “ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்” என்றாள்.
2 பின்பு, அவள் அவன் சகோதரன் ஆபேலைப் பெற்றெடுத்தாள். ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான். காயின் நிலத்தைப் பண்படுத்துபவன் ஆனான்.
3 சில நாள்கள் சென்றன. காயின் நில... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-4 |
4 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 5 – திருவிவிலியம் | ஆதாமின் வழிமரபினர்
(1 குறி 1:1-4)
1 ஆதாமின் வழிமரபின் அட்டவணை பின்வருமாறு: கடவுள் மனிதரைப் படைத்தபொழுது அவர்களைத் தம் சாயலில் உருவாக்கினார்.
2 ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். அவர்களைப் படைத்த நாளில் அவர்களுக்கு ஆசி வழங்கி, ‘மனிதர்’ என்று பெயரிட்டார்.
3 ஆதாமுக்கு நூற்று முப்பது வயதானபோது, அவனுக்கு அவன் சாயலிலும் உர... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-5 |
5 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 6 – திருவிவிலியம் | மனிதரின் தீச்செயல்
1 மண்ணில் மனிதர் பெருகத் தொடங்கி, அவர்களுக்குப் புதல்வியர் பிறந்தபொழுது,
2 மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைத் தெய்வப் புதல்வர் கண்டு, தாங்கள் தேர்ந்து கொண்டவர்களையெல்லாம் மனைவியர் ஆக்கிக்கொண்டனர்.
3 அப்பொழுது ஆண்டவர், “என் ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப் போவதில்லை. அவன் வெறும் சதைதானே!... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-6 |
6 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 7 – திருவிவிலியம் | வெள்ளப்பெருக்கு
1 அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: “நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன்.
2 தக்க விலங்குகள் எல்லாவற்றிலிருந்தும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும், தகாத விலங்குகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஒரு சோடியையும்.
3 வானத்துப் பறவைகளி... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-7 |
7 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 8 – திருவிவிலியம் | வெள்ளப்பெருக்கின் முடிவு
1 கடவுள் நோவாவையும் அவருடன் பேழைக்குள் இருந்த எல்லாக் காட்டு விலங்குகள், கால் நடைகள் அனைத்தையும் நினைவு கூர்ந்தார். ஆகவே, மண்ணுலகின் மீது காற்று வீசச் செய்தார்; வெள்ளம் தணியத் தொடங்கியது.
2 பேராழத்தின் ஊற்றுகளும், வானங்களின் மதகுகளும் மூடப்பட்டன; வானத்திலிருந்து மழை பெய்வது நின்றது.
3 மண்ணுலகில... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-8 |
8 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 9 – திருவிவிலியம் | நோவாவுடன் கடவுளின் உடன்படிக்கை
1 கடவுள் நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கிக் கூறியது: “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்.
2 மண்ணுலகின் விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன, கடலின் மீன்கள் அனைத்தும் உங்களுக்கு அஞ்சி நடுங்கட்டும்! அவை உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
3 நடமாடி உயிர்வாழும் அனைத்து... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-9 |
9 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 10 – திருவிவிலியம் | நோவா புதல்வரின் வழிமரபினர்
(1 குறி 1:5-23)
1 நோவாவின் புதல்வர் சேம், காம், எப்பேத்து ஆகியோரின் வழிமரபினர் இவர்களே. வெள்ளப் பெருக்குக்குப்பின் அவர்களுக்குப் புதல்வர் பிறந்தனர்.
2 எப்பேத்தின் புதல்வர்: கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மெசேக்கு, தீராசு.
3 கோமேரின் புதல்வர்: அஸ்கனாசு, இரிபாத்து, தோகர்மா.
4 யாவானின் ... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-10 |
10 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 11 – திருவிவிலியம் | பாபேல் கோபுரம்
1 அப்பொழுது உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன.
2 மக்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சினயார் நாட்டில் சமவெளி ஒன்றைக் கண்டு, அங்கே குடியேறினர்.
3 அப்பொழுது அவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி, “வாருங்கள், நாம் செங்கற்கள் அறுத்து அவற்றை நன்றாகச் சுடுவோம்” என்றனர். அவர்கள் செங்கல்லைக... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-11 |
11 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 12 – திருவிவிலியம் | ஆபிராமின் அழைப்பு
1 ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்.
2 உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.
3 உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-12 |
12 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 13 – திருவிவிலியம் | ஆபிராம், லோத்து பிரிதல்
1 ஆகவே, ஆபிராம் தம் மனைவியுடனும் தமக்குரிய எல்லாவற்றுடனும் எகிப்திலிருந்து நெகேபை நோக்கிச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார்.
2 அப்பொழுது ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார்.
3 நெகேபிலிருந்து பெத்தேல் வரை படிப்படியாகப் பயணம் செய்து பெத்தெலுக்கும் ஆயிக்கும் இ... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-13 |
13 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 14 – திருவிவிலியம் | ஆபிராம் லோத்தை மீட்டல்
1 அம்ராபல் சினயார் அரசனாகவும் அரியோக்கு எல்லாசரின் அரசனாகவும் கெதர்லகோமர் ஏலாமின் அரசனாகவும் திதால் கோயிமின் அரசனாகவும் இருந்தபொழுது,
2 அவர்கள் சோதோம் அரசன் பெரா, கொமோரா அரசன் பிர்சா, அதிமா அரசன் சினாபு, செபோயிம் அரசன் செமேபர், பேலா அரசன் சோவார் ஆகியோருக்கு எதிராகப் போர் தொடுத்தனர்.
3 அவர்கள் அனை... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-14 |
14 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 15 – திருவிவிலியம் | ஆபிராமுடன் கடவுளின் உடன்படிக்கை
1 இந்நிகழ்ச்சிகளுக்குப் பின், ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: “ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.”
2 அப்பொழுது ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நக... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-15 |
15 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 16 – திருவிவிலியம் | ஆகாரும் இஸ்மயேலும்
1 ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லை. சாராய்க்கு ஆகார் என்ற எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள்.
2 சாராய் ஆபிராமிடம், “ஆண்டவர் என்னைப் பிள்ளை பெறாதபடி செய்துவிட்டார். நீர் என் பணிப்பெண்ணிடம் உறவு கொள்ளும். ஒருவேளை அவள் எனக்காகப் பிள்ளை பெற்றுத் தரக்கூடும்” என்றார். ஆபிராம் சாராயின் சொல்லைக் க... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-16 |
16 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 17 – திருவிவிலியம் | ஆபிரகாமுடன் கடவுளின் உடன்படிக்கை-விருத்தசேதனம்
1 ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, “நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு.
2 உனக்கும் எனக்குமிடையே ஓர் உடன்படிக்கையை நான் ஏற்படுத்திக்கொள்வேன்; உன்னை மிகமிகப் பெருகச் செய்வேன்” என்றார்.
3 அப்பொழுது ஆபிர... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-17 |
17 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 18 – திருவிவிலியம் | ஆபிரகாமுக்கு மகன் வாக்களிக்கப்பெறல்
1 பின்பு, ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில்,
2 கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூட... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-18 |
18 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 19 – திருவிவிலியம் | சோதோமின் தீச்செயல்
1 மாலை வேளையில் ஆண்டவரின் தூதர் இருவர் சோதோமுக்கு வந்தனர். அப்பொழுது நகரின் நுழை வாயிலில் லோத்து உட்கார்ந்திருந்தார். அவர் அவர்களைக் கண்டவுடன் எழுந்து சந்திக்கச் சென்று தரைமட்டும் தாழ்ந்து அவர்களை வணங்கினார்.
2 பிறகு, “என் தலைவர்களே, அருள்கூர்ந்து உங்கள் அடியானின் இல்லத்திற்கு வாருங்கள். உங்கள் கால்க... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-19 |
19 | தொடக்கநூல் | தொடக்கநூல் அதிகாரம் – 20 – திருவிவிலியம் | ஆபிரகாமும் அபிமெலக்கும்
1 ஆபிரகாம் அங்கிருந்து புறப்பட்டு நெகேபுக்குச் சென்று காதேசுக்கும் சூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்து, பின்னர் கெராரில் தங்கினார்.
2 அப்போது ஆபிரகாம் தம் மனைவி சாராவைத் தம் சகோதரி என்று சொல்லிக் கொண்டமையால், கெரார் மன்னனாகிய அபிமெலக்கு ஆளனுப்பி அவரை அழைத்துவரச் செய்தான்.
3 இரவில் ஆண்டவர் அப... | https://bible.catholicgallery.org/tamil/etb-genesis-20 |
End of preview. Expand in Data Studio
Full Bible Chapter wise - Tamil
Web Scrapped from https://bible.catholicgallery.org/ecu-tamil/
- Downloads last month
- 17