Unnamed: 0
int64
0
1.34k
Book
stringclasses
75 values
Chapter
stringlengths
25
48
Content
stringlengths
252
17.1k
Url
stringlengths
47
62
100
லேவியர்
லேவியர் அதிகாரம் – 11 – திருவிவிலியம்
உண்ணத் தக்க விலங்குகள் (இச 14:3-21) 1 ஆண்டவர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, அவர்களிடம் கூறியது: 2 “நீங்கள் இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; உலகில் உள்ள உயிரினங்களில் நீங்கள் உண்ணத்தக்கவை இவைகளே. 3 கால்நடைகளில், குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிற, விரிசல் குளம்புள்ள, அசைபோடுபவற்றை நீங்கள் உண்ணலாம். 4 அசைபோடும் கால்நடைக்க...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-11
101
லேவியர்
லேவியர் அதிகாரம் – 12 – திருவிவிலியம்
பேறுகாலப் பெண்களைத் தூய்மைப்படுத்தல் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 இஸ்ரயேல் மக்களுக்கு நீ சொல்லவேண்டியது: ஒருபெண், கருத்தரித்து ஆண் குழந்தை பெற்றால் ஏழு நாள் விலக்கு நாள்களில் இருப்பதுபோலவே, தீட்டுப்பட்டிருப்பாள். 3 எட்டாம் நாளன்று அதற்கு விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். 4 தொடர்ந்து வரும் முப்பதி மூன்று நாள்கள், அவள்...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-12
102
லேவியர்
லேவியர் அதிகாரம் – 13 – திருவிவிலியம்
தொழுநோய்பற்றிய சட்டங்கள் 1 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது; 2 “ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டு வரப்படவேண்டும். 3 அவர் உடலில் நோயிருக்கும் இடத்தைக் குரு ப...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-13
103
லேவியர்
லேவியர் அதிகாரம் – 14 – திருவிவிலியம்
தொழுநோய் கண்டபின் தூய்மை செய்தல் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 தொழுநோயாளியின் தீட்டகற்றும் நாளில் அவரைக் குறித்த சட்டம்; அவர் குருவிடம் அழைத்து வரப்பட வேண்டும். குரு பாளையத்திற்கு வெளியே வந்து, அவரைச் சோதித்துப் பார்க்க வேண்டும். 3 தொழுநோயாளியின் நோய் குணமாயிற்று எனக் குரு கண்டால், 4 தீட்டு அகற்றப்பட இருப்போரை உயிருள்...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-14
104
லேவியர்
லேவியர் அதிகாரம் – 15 – திருவிவிலியம்
உடலில் ஏற்படும் தூய்மையற்ற ஒழுக்கு 1 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: 2 “இஸ்ரயேல் மக்களுக்கு நீங்கள் கூறவேண்டியது: 3 ஒருவனுக்கு விந்து ஒழுக்கு இருப்பின் — உடலிலிருந்து அது வெளிப்பட்டாலும், உடலுள் அடக்கிவைக்கப்பட்டாலும் — அது அவனுக்குத் தீட்டு. 4 விந்து ஒழுக்கு உடையவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டு; அவன் அமர...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-15
105
லேவியர்
லேவியர் அதிகாரம் – 16 – திருவிவிலியம்
பாவக் கழுவாய் நிறைவேற்றும் நாள் 1 ஆரோனின் புதல்வர் இருவர் ஆண்டவரது திருமுன்னிலையை நெருங்கியதால் சாவுக்குள்ளானபின், ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 “ஆரோனிடம் நீ கூற வேண்டியது; அவன் சாகாது இருக்க வேண்டுமெனில், தூயகத்தில் தொங்குதிரைக்கு உள்ளே இருக்கும் இரக்கத்தின் இருக்கையின் மூடிக்கு முன்பாக, அவன் விரும்பும் போதெல்லாம் வரக்...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-16
106
லேவியர்
லேவியர் அதிகாரம் – 17 – திருவிவிலியம்
இரத்தத்தின் புனிதம் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 “ஆரோன், அவன் புதல்வர், எல்லா இஸ்ரயேல் மக்கள் ஆசியோரிடம் நீ கூறவேண்டிய ஆண்டவரின் வார்த்தை இதுவே: 3 “இஸ்ரயேல் குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் மாடு, ஆடு, அல்லது வெள்ளாடு இவற்றைச் சந்திப்புக்கூடார வாயிலான ஆண்டவர் உறையும் இடத்தில் அவரது திருமுன் ஆண்டவருக்குச் செலுத்தும்படி க...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-17
107
லேவியர்
லேவியர் அதிகாரம் – 18 – திருவிவிலியம்
பாலியற் குற்றங்கள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 “நீ இஸ்ரயேல் மக்களுக்குக் கூறவேண்டியது: நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவர். 3 நீங்கள் குடியிருந்த எகிப்து நாட்டின் வழக்கப்படி செய்ய வேண்டாம்; நான் உங்களை அழைத்துச் செல்லும் கானான் நாட்டின் வழக்கப்படியும் செய்ய வேண்டாம். அவர்கள் முறைமையும் வேண்டாம். 4 நியமங்களை ஏற்று, என் ஆணை...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-18
108
லேவியர்
லேவியர் அதிகாரம் – 19 – திருவிவிலியம்
தூய்மை, நீதி ஆகியவை பற்றிய சட்டங்கள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 “நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; தூயோராய் இருங்கள். ஏனெனில், உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்! 3 நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தாய் தந்தைக்கு அஞ்சுங்கள். என் ஓய்வு நாளைக் கடைப்பிடியுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! 4 சிலைகள் பக்கம் திரும...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-19
109
லேவியர்
லேவியர் அதிகாரம் – 20 – திருவிவிலியம்
கீழ்ப்படியாமைக்கான தண்டனைகள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 “இஸ்ரயேல் புதல்வரிலோ இஸ்ரயேலில் தங்கும் அந்நியரிலோ யாரேனும் தன் வழிமரபில் ஒரு பிள்ளையை மோலெக்குக்குக் கொடுத்தால், நாட்டு மக்கள் அவனைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். 3 அவனை எதிர்த்து நான் என் முகத்தைத் திருப்பிக்கொள்வேன். எனது தூயகத்தைத் தீட்டுப்படுத்தி, திரு...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-20
110
லேவியர்
லேவியர் அதிகாரம் – 21 – திருவிவிலியம்
குருக்களின் தூய்மை 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “ஆரோனின் புதல்வரான குருக்களுக்குச் சொல்; அவர்களுள் எவனும் தன் இனத்தாரில் இறந்துபோன ஒருவராலே தன்னைத் தீட்டப்படுத்த வேண்டாம். 2 தனக்கு இரத்த உறவான தாய், தந்தை, மகன், மகள், சகோதரன், 3 மணமாகாமல் தன்னுடன் வாழ்ந்த கன்னியான சகோதரி — ஆகியவர்களைத் தவிர 4 வேறேவராலும் — திருமணத்தால்...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-21
111
லேவியர்
லேவியர் அதிகாரம் – 22 – திருவிவிலியம்
காணிக்கைகளின் தூய்மை 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 இஸ்ரயேல் மக்கள் எனக்கு நேர்ச்சையாகச் செலுத்தும் தூய பொருள்களால் ஆரோனும் அவன் பிள்ளைகளும் என் பெயரை இழிவுபடுத்தாதபடி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களிடம் கூறு. நானே ஆண்டவர். 3 அவர்களிடம் நீ கூற வேண்டியது: உங்கள் வழிமரபினருள் எவனும் தீட்டுப்பட்டிருந்து, இஸ்ரயே...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-22
112
லேவியர்
லேவியர் அதிகாரம் – 23 – திருவிவிலியம்
சமய பெருவிழாக்கள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 “இஸ்ரயேல் மக்களிடம் நீ இவ்வாறு கூறு: நீங்கள் சபையாகக் கூடிப் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவருக்குரிய பண்டிகை நாள்களாவன: 3 ஆறு நாள்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ முழுமையாக ஓய்வெடுக்கும் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் ஒரு வேலையும் செய்யவேண்டாம்....
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-23
113
லேவியர்
லேவியர் அதிகாரம் – 24 – திருவிவிலியம்
விளக்குகளைப் பேணுதல் (விப 27:20-21) 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 எப்போதும் குத்துவிளக்கு எரிந்துகொண்டிருக்க, தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடம் கொண்டு வர இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு. 3 சந்திப்புக் கூடாரத்தில் உடன்படிக்கைத் திரைக்கு வெளியே, மாலைமுதல் காலைவரை எப்போதும் அது ஆண்டவருக்கு முன் எரிந்துகொண்டிருக்க வேண்டும். ...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-24
114
லேவியர்
லேவியர் அதிகாரம் – 25 – திருவிவிலியம்
ஏழாம் ஆண்டு-ஓய்வின் ஆண்டு (இச 15:1-11) 1 ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயிடம் கூறியது: 2 நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; நான் உங்களுக்கு வழங்கும் நாட்டில் நீங்கள் வந்து சேரும்போது, நாடு ஆண்டவருக்கென்று ஓய்வு நாளைக் கொண்டாட வேண்டும். 3 ஆறு ஆண்டுகள் வயலைப் பயிரிட்டுத் திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்கி அவற்றின் பலனைச் சேர்...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-25
115
லேவியர்
லேவியர் அதிகாரம் – 26 – திருவிவிலியம்
கீழ்ப்படிதலுக்கான பலன் (இச 7:12-24; 28:1-14) 1 நீங்கள் உங்களுக்கு எனச் சிலைகளையும் படிமங்களையும் கல்தூண்களையும் உருவாக்கிக் கொள்ள வேண்டாம். வணங்குவதற்கெனச் கற்சிலைகளை நாட்டில் நாட்ட வேண்டாம். ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்! 2 ஓய்வுநாள்களைக் கடைப்பிடித்து, என் தூயகத்திற்கு அஞ்சி வாழ்வீர்களாக! நானே ஆண்டவர்! 3 நீங...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-26
116
லேவியர்
லேவியர் அதிகாரம் – 27 – திருவிவிலியம்
ஆண்டவருக்குரிய நேர்ச்சையும் வரியும் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: ஒருவர் யாரையேனும் பொருத்தனையாகச் செலுத்தத் திட்டமிட்டிருந்தால் அவர்கள் உன் மதிப்பின்படி ஆண்டவருக்கு உரியவர். 3 இருபது வயதிலிருந்து அறுபது வயதுக்கு உட்பட்ட ஆண்மகனுக்குத் திருக்கோவில் அளவையின்படி அறுநூறு கிராம்* வெள்ளி;...
https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-27
117
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 1 – திருவிவிலியம்
இஸ்ரயேலில் முதல் கணக்கெடுப்பு 1 இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய இரண்டாம் ஆண்டு, இரண்டாம் மாதம், முதல் நாளன்று, சீனாய்ப் பாலைநிலத்தில் சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் மோசேயுடன் பேசினார். அவர் கூறியது: 2 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள ஆண்கள் அனைவரையும் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணி...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-1
118
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 2 – திருவிவிலியம்
பாளையத்தில் குலங்களின் ஒழுங்கமைப்பு 1 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: 2 இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் கொடி, மூதாதையர் வீட்டுச் சின்னங்கள் இவற்றின்படி பாளையமிறங்குவர்; எல்லாப் பக்கத்திலிருந்தும் சந்திப்புக் கூடாரத்தை நோக்கியவாறு அவர்கள் பாளையமிறங்குவர். 3 கிழக்கே கதிரவன் உதயத்தை நோக்கிப் பாளையமிறங்க வேண்...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-2
119
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 3 – திருவிவிலியம்
ஆரோனின் புதல்வர் 1 ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயுடன் பேசிய காலத்தில் ஆரோன், மோசே ஆகியோரின் வழிமரபினர் இவர்களே; 2 ஆரோனின் புதல்வர் பெயர்கள் இவையே; தலைமகன் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர். 3 இவை குருத்துவப் பணிக்கென அருள்பொழிவு பெற்றுத் திருநிலைப்படுத்தப்பட்ட குரு ஆரோனின் புதல்வர் பெயர்கள்; 4 ஆனால், நாதாபும் அபிகூவும் சீ...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-3
120
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 4 – திருவிவிலியம்
கோகாத்து என்னும் லேவியர் குலமரபினரின் கடமைகள் 1 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: 2 லேவியின் புதல்வர்களிலிருந்து கோகாத்தின் புதல்வரை அவர்கள் மூதாதையர், வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு. 3 சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையுள்ள அனைவரையும் கணக்கெடு. 4 சந்திப்ப...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-4
121
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 5 – திருவிவிலியம்
தூய்மையற்ற மக்கள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 தொழுநோயர், வெட்டையுள்ளோர், பிணத்தால் தீட்டுப்பட்டோர் அனைவரையும் பாளையத்துக்குப் புறம்பாக்குமாறு இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு. 3 மக்களிடையே நான் தங்கியிருக்கும் பாளையத்தை அவர்கள் தீட்டுப்படுத்தி விடாதபடி ஆணாயினும், பெண்ணாயினும் அவர்களைப் பாளையத்துக்குப் புறம்பாக்கிவிட...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-5
122
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 6 – திருவிவிலியம்
நாசீர் விதிகள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஓர் ஆணோ பெண்ணோ தன்னை ஆண்டவருக்குத் தனிப்படுத்திச் சிறப்பான பொருத்தனையான நாசீர்* பொருத்தனை செய்து ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தால், 3 திராட்சை இரசம், மது ஆகியவற்றை அவன் விலக்க வேண்டும்; திராட்சை இரசம், மது ஆகியவற்றின் காடியை அருந்தக் கூடாது. திராட்...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-6
123
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 7 – திருவிவிலியம்
தலைவர்களின் படையல்கள் 1 மோசே திருஉறைவிடத்தை எழுப்பிமுடித்து, அதனை அதன் அனைத்துப் பொருள்களோடும் திருப்பொழிவு செய்து அர்ப்பணித்து. பீடத்தையும், அதன் துணைக்கலன்களோடு திருப்பொழிவு செய்து அர்ப்பணித்த நாளில், 2 கணக்கிடப்பட்டோர்க்கு மேற்பார்வையாளராயிருந்த இஸ்ரயேல் தலைவர்கள், அவர்கள் மூதாதையர் வீட்டுத்தலைவர்கள், குலத் தலைவர்கள...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-7
124
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 8 – திருவிவிலியம்
விளக்குகள் வைத்தல் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 “ஆரோனிடம் சொல்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு அகல்களும் விளக்குத் தண்டுக்கு முன்பக்கம் ஒளிதர வேண்டும்”. 3 ஆரோன் அப்படியே செய்தார்; ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி விளக்குத்தண்டுக்கு முன்பக்கம் ஒளி தரும்படி அதன் அகல்களை ஏற்றினார். 4 விளக்குத் தண்டின் வேலைப்பாடு; அது பொ...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-8
125
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 9 – திருவிவிலியம்
இரண்டாம் பாஸ்கா 1 எகிப்து நாட்டிலிருந்து அவர்கள் வெளியேறி வந்த இரண்டாம் ஆண்டு முதல் மாதம் சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் மோசேயோடு பேசினார். அவர் கூறியதாவது: 2 இஸ்ரயேல் மக்கள் குறிக்கப்பட்ட காலத்தில் பாஸ்காவைக் கொண்டாடட்டும். 3 இம்மாதம் பதினான்காம் நாள் அந்தி மாலைப்பொழுதில் குறிக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் அதைக் கொண்டாடு...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-9
126
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 10 – திருவிவிலியம்
வெள்ளி எக்காளங்கள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 இரண்டு வெள்ளி எக்காளங்களைச் செய்துகொள்; அடிப்பு வேலையாக அவற்றைச் செய்ய வேண்டும். மக்கள் கூட்டமைப்பை ஒன்று கூட்டவும், பாளையத்தைப் பெயர்க்கவும் நீ அவற்றைப் பயன்படுத்துவாய். 3 அவை இரண்டும் ஊதப்படும்போது மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சந்திப்புக்கூடார வாயிலில் உன்முன்னே ஒன்று...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-10
127
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 11 – திருவிவிலியம்
தபேரா பலி 1 பின்னர், ஆண்டவரின் செவிகளில் படுமாறு தங்கள் கடினப்பாடுகளைப் பற்றி மக்கள் முறையிட்டனர்; ஆண்டவர் அதைக் கேட்டபோது அவருக்குச் சினம் மூண்டது; ஆண்டவரின் நெருப்பு அவர்களிடையே பற்றி எரிந்தது; பாளையத்தின் கடைக்கோடிப் பகுதிகள் சிலவற்றை அது எரித்துவிட்டது. 2 அப்போது மக்கள் மோசேயிடம் அழுதனர்; மோசே ஆண்டவரிடம் மன்றாடவே ந...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-11
128
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 12 – திருவிவிலியம்
மிரியாம் தண்டிக்கப்படல் 1 மோசே எத்தியோப்பியப் பெண்ணை மணந்திருந்தார்; அவர் மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினர். 2 அவர்கள், “ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? அவர் எங்கள் வழியாகவும் பேசவில்லையா?” என்றனர். ஆண்டவர் இதனைக் கேட்டார். 3 பூவுலகின் அனைத்து ...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-12
129
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 13 – திருவிவிலியம்
உளவாளிகள் (இச 1:19-33) 1 ஆண்டவர் மோசேயிடம், 2 “இஸ்ரயேல் மக்களுக்கு நான் கொடுக்கும் கானான் நாட்டை உளவு பார்க்க ஆள்களை அனுப்பு; மூதாதையர் குலம் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களுள் தலைவனாயிருக்கும் ஒருவனை நீ அனுப்ப வேண்டும்” என்றார். 3 ஆண்டவர் கட்டளைப்படியே மோசே அவர்களைப் பாரான் பாலைநிலத்திலிருந்து அனுப்பினார்; அந்த ஆள்கள் அனைவ...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-13
130
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 14 – திருவிவிலியம்
மக்களின் முறையீடு 1 உடனே மக்கள் கூட்டமைப்பு முழுதும் உரத்தக் குரலில் புலம்பிற்று; மக்கள் அன்றிரவு அழுது கொண்டே இருந்தனர். 2 இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்; மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் அவர்களிடம், “எகிப்து நாட்டில் நாங்கள் இறந்திருந்தால் எவ்வளவோ நலம்! இந்தப் பாலை நிலத்தில் மடி...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-14
131
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 15 – திருவிவிலியம்
பலி பற்றிய சட்டங்கள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 “நீ இஸ்ரயேல் மக்களிடம் இவ்வாறு சொல்; நீங்கள் குடியிருக்க நான் உங்களுக்குத் தரும் நாட்டினுள் வரும்போது மாட்டுமந்தையிலிருந்து அல்லது ஆட்டு மந்தையிலிருந்து நெருப்புப் பலியொன்றை ஆண்டவருக்குப் படைப்பாய்; 3 அது எரிபலியாகவோ வேறு பலியாகவோ இருக்கும்; அது பொருத்தனையை நிறைவேற்று...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-15
132
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 16 – திருவிவிலியம்
கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் புரட்சி 1 லேவியின் மகன் கோகாத்துக்குப் பிறந்த இட்சகாரின் புதல்வன் கோராகும், ரூபன் வழிவந்த எலியாபு புதல்வர்கள் தாத்தான், அபிராமும், பெலேத்தின் மகன் ஓனும், 2 இஸ்ரயேல் மக்களில் சிலரைச் சேர்த்துக்கொண்டு மோசேக்கு எதிராக எழும்பினர். இவர்கள் மக்கள் கூட்டமைப்பிலிருந்து சபையில் தெரிந்தெடுக்கப...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-16
133
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 17 – திருவிவிலியம்
ஆரோனின் கோல் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 இஸ்ரயேல் மக்களிடம் நீ பேசு; மூதாதையர் குலம் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோல் வீதம் அவர்கள் தலைவர்களிடம் தங்கள் மூதாதையர் குலங்களுக்கேற்பப் பன்னிரண்டு கோல்களைப் பெற்றுக் கொள்; ஒவ்வொருவன் பெயரையும் அவன் கோலின் மேல் எழுது; 3 ஆரோன் பெயரை லேவியின் கோலின் மேல் எழுது; இவ்வாறு ஒவ்வொரு மூதாதை...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-17
134
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 18 – திருவிவிலியம்
குருக்கள், லேவியர் கடமைகள் 1 பின்னர், ஆண்டவர் ஆரோனிடம் கூறியது: நீயும் உன் புதல்வரும் உன்னோடிருக்கும் உன் மூதாதையர் வீட்டாரும் திருஉறைவிடம் தொடர்பான குற்றத்தைச் சுமப்பீர்கள்; உங்கள் குருத்துவம் தொடர்பான குற்றத்தையோ நீயும் உன்னோடிருக்கும் உன் புதல்வரும் சுமப்பீர்கள். 2 மூதாதையர் குலமான லேவிக் குலத்திலுள்ள உன் சகோதரரையும...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-18
135
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 19 – திருவிவிலியம்
செங்கிடாரியின் சாம்பல் 1 பின்னும், ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது: 2 ஆண்டவர் கட்டளையிட்ட சட்டவிதிமுறை இதுவே: பழுதற்ற செங்கிடாரி ஒன்றை உன்னிடம் கொண்டு வரும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல்; அது குறையற்றதும் ஒருபோதும் நுகம் சுமக்காததுமாய் இருக்கட்டும். 3 அதை நீ குரு எலயாசரிடம் கொடுப்பாய்; அது பாளையத்துக்கு வெளியே எடுத...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-19
136
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 20 – திருவிவிலியம்
காதேசு நிகழ்ச்சிகள் (விப 17:1-7) 1 முதல் மாதத்தில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சீன் பாலைநிலத்துக்கு வந்தது; மக்கள் காதேசில் தங்கினர். மிரியாம் அங்கே இறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டாள். 2 அப்போது மக்கள் கூட்டமைப்புக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக ஒன்று கூடினர். 3 மக்கள் ம...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-20
137
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 21 – திருவிவிலியம்
கானானியர்மேல் வெற்றி 1 இஸ்ரயேல் அத்தாரிம் வழியாக வருவதை நெகேபில் வாழ்ந்த கானானியனாகிய அராது மன்னன் கேள்வியுற்றான்; அப்போது அவன் இஸ்ரயேலோடு போரிட்டு அவர்களில் சிலரைச் சிறைபிடித்தான். 2 உடனே ஆண்டவரிடம் இஸ்ரயேல் பொருத்தனை செய்து, “நீர் உண்மையில் இம்மக்களை என்கையில் ஒப்படைத்தால் அவர்கள் நகர்களை நான் அழித்துவிடுவேன்” என்று ...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-21
138
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 22 – திருவிவிலியம்
பிலயாமுக்காக மோவாபு மன்னன் ஆளனுப்புதல் 1 அதன் பின்னர், இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு யோர்தானுக்கு அக்கரையில் எரிகோவுக்கு அருகிலுள்ள மோவாபிய சமவெளிகளில் பாளையமிறங்கினார்கள். 2 சிப்போர் மகன் பாலாக்கு இஸ்ரயேல் எமோரியருக்குச் செய்திருந்த அனைத்தையும் கண்டான். 3 இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை முன்னிட்டு மோவாபு பெரிதும் கலங்கிற்று;...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-22
139
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 23 – திருவிவிலியம்
1 பிலயாம் பாலாக்கிடம், “எனக்காக இங்கு ஏழு பலி பீடங்களை எழுப்பும்; எனக்காக இங்கு ஏழு காளைகளையும் ஏழு கிடாய்களையும் தாரும்” என்றார். 2 பிலயாம் சொன்னபடியே பாலாக்கு செய்தான்; பிலயாமும் பாலாக்கும் ஒவ்வொரு பலி பீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டனர். 3 பிலயாம், பாலாக்கைப் பார்த்து, “உம் எரிபலியருகே நின்று கொள்ள...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-23
140
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 24 – திருவிவிலியம்
1 இஸ்ரயேலுக்கு ஆசி கூறுவதே ஆண்டவருக்கு விருப்பம் என்று பிலயாம் கண்டபோது, முன்பு செய்தது போன்று அவர் சகுனம் பார்க்கச் செல்லாமல், தம் முகத்தைப் பாலைநிலத்துக்கு நேரே திருப்பினார். 2 பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே குலம் குலமாகப் பாளையமிறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர் மேல் இறங்கியது. 3 அவர் திருஉரையாகக் கூ...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-24
141
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 25 – திருவிவிலியம்
பெகோரில் இஸ்ரயேல் மக்கள் 1 இஸ்ரயேல் சித்திமில் தங்கியிருந்தபோது மக்கள் மோவாபின் புதல்வியரோடு முறைகேடாக நடக்கத் தொடங்கினர். 2 அவர்கள் தங்கள் தெய்வங்களின் பலிகளில் பங்கேற்க மக்களை அழைத்தனர்; மக்கள் உண்டு அவர்கள் தெய்வங்களைப் பணிந்து வணங்கினர். 3 இங்ஙனம், இஸ்ரயேல் பாகால்பெகோரை அடிபணிந்தது; எனவே, ஆண்டவரின் சினம் இஸ்ரயேலுக்...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-25
142
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 26 – திருவிவிலியம்
இரண்டாம் கணக்கெடுப்பு 1 அந்தக் கொள்ளை நோய்க்குப் பின்பு ஆண்டவர் மோசேயிடமும் குரு ஆரோன் மகன் எலயாசரிடமும், 2 “இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பு முழுவதிலும் இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள போருக்குச் செல்லத்தக்க இஸ்ரயேலின் ஆண் மக்கள் அனைவரையும் அவர்கள் மூதாதையர் வீடுகள் வாரியாகக் கணக்கெடுங்கள்” என்றார். 3 மோசேயும் குரு எலயா...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-26
143
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 27 – திருவிவிலியம்
செலொபுகாதின் புதல்வியர் 1 யோசேப்புப் புதல்வரான மனாசே குடும்பங்களைச் சார்ந்தவர் செலொபுகாத்து. இவர் மனாசேயின் மைந்தர் மாக்கிரின் புதல்வர் கிலியாதுக்குப் பிறந்த ஏபேரின் மகன், இவருக்கு மக்லா, நோகா, ஒக்லா, மில்கா, திர்சா என்ற புதல்வியர் இருந்தனர். 2 அவர்கள் வந்து மோசே, குரு எலயாசர், தலைவர்கள், மக்கள் கூட்டமைப்பினர் அனைவர் ம...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-27
144
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 28 – திருவிவிலியம்
படையல்களின் ஒழுங்கு முறை (விப 29:38-46) 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 நீ இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்; எனக்குரிய நேர்ச்சையை, நெருப்புப் பலியான உணவை, எனக்கு உகந்த நறுமணத்தைக் குறிக்கப்பட்ட காலத்தில் எனக்குப் படைப்பதில் நீங்கள் கருத்தாயிருக்க வேண்டும். 3 நீ அவர்களிடம் சொல்; நெருப்புப் பலியாக நீங்கள் ஆண்டவரு...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-28
145
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 29 – திருவிவிலியம்
புத்தாண்டு விழாப் படையல்கள் (லேவி 23:23-25) 1 ஏழாம் மாதம் முதல் நாளன்று உங்களுக்குத் திருப்பேரவை இருக்கும்; நீங்கள் கடினவேலை ஏதும் செய்யக்கூடாது. உங்களுக்காக எக்காளங்கள் முழங்கும் நாள் அது. 2 ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியை நீங்கள் செலுத்த வேண்டும். அதற்கு வேண்டியவை; இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-29
146
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 30 – திருவிவிலியம்
பொருத்தனை பற்றிய விதிமுறைகள் 1 மோசே இஸ்ரயேல் மக்களின் குலத் தலைவர்களிடம் கூறியது: கடவுள் கட்டளையிட்டிருப்பது இதுவே; 2 ஆண்டவருக்குப் பொருத்தனை ஒன்றை ஒருவன் செய்துகொண்டால் அல்லது ஆணையிட்டுக் கூறிய உறுதிமொழிக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டால் அவன் தன் வார்த்தையை மீறக்கூடாது. தான் உரைத்தபடியெல்லாம் அவன் செய்ய வேண்டும். 3 ஒர...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-30
147
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 31 – திருவிவிலியம்
மிதியானுக்கு எதிரான புனிதப் போர் 1 ஆண்டவர் மோசேயிடம், 2 “இஸ்ரயேல் மக்களை முன்னிட்டு மிதியானியரைப் பழி வாங்கு; அதன்பின் நீ உன் மக்களுடன் சேர்க்கப்படுவாய்” என்றார். 3 மோசே மக்களிடம் கூறியது: ஆண்டவருக்காக மிதியானியரைப் பழிவாங்குமாறு அவர்களுக்கு எதிராகச் செல்லும்படி உங்களிலிருந்து ஆள்களைப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள். 4 இ...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-31
148
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 32 – திருவிவிலியம்
யோர்தானுக்குக் கிழக்கிலிருந்த குலங்கள் (இச 3:12-22) 1 ரூபன் புதல்வருக்கும் காத்துப் புதல்வருக்கும் ஆடு, மாடுகள் பெருந்திரளாயிருந்தன; அவர்கள் யாசேர் நாட்டையும், கிலயாது நாட்டையும் கண்டனர்; அந்த இடம் ஆடு, மாடுகளுக்கேற்றதாக இருந்தது. 2 எனவே, அவர்கள் மோசே, குரு எலயாசர், மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆகியோரிடம் வந்து, 3 “அ...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-32
149
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 33 – திருவிவிலியம்
விடுதலைப் பயணத்தின் தொகுப்பு 1 மோசே, ஆரோன் ஆகியோர் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டைவிட்டுப் படைத்திரளாக வெளியேறிச் சென்றபோது அவர்கள் பயணம் செய்த பகுதிகள் இவையே; 2 அவர்கள் புறப்பட்ட இடங்களை மோசே ஆண்டவர் கட்டளைப்படி படிப்படியாக எழுதி வைத்தார்; அவர்கள் படிப்படியாகத் தங்கிப் புறப்பட்ட இடங்கள் இவையே; 3 முதல் மாதம் ப...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-33
150
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 34 – திருவிவிலியம்
நாட்டின் எல்லைகள் 1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்; கானான் நாட்டின் முழுப்பரப்பும் உங்களுக்கு உரிமைச் சொத்தாக வந்து சேரும். கானான் நாட்டில் நீங்கள் நுழையும் போது, 3 உங்கள் தெற்குப் பகுதி சீன்பாலை நிலத்திலிருந்து ஏதோமின் ஓரமாகச் செல்லும். அதன் எல்லை கிழக்கில் உப்புக் கடலின் முடிவி...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-34
151
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 35 – திருவிவிலியம்
லேவியருக்கு வழங்கப்பட்ட நகர்கள் 1 எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2 தாங்கள் உடைமையாக்கிக் கொண்ட உரிமைச் சொத்திலிருந்து லேவியர் குடியிருப்பதற்காக நகர்களைக் கொடுக்கும்படி இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு; அவற்றுடன் நகர்களைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களையும் நீங்கள் லேவியர...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-35
152
எண்ணிக்கை
எண்ணிக்கை அதிகாரம் – 36 – திருவிவிலியம்
மணம் முடித்த பெண்களின் உரிமைச் சொத்து 1 யோசேப்பு புதல்வரைச் சார்ந்த குடும்பங்களில் மனாசே மகனான மாக்கிரின் புதல்வனான கிலயாதின் மைந்தரது குடும்பத்தைச் சார்ந்த மூதாதையர் வீடுகளின் தலைவர்கள், மோசேயிடமும், இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகிய பெரியோர்களிடமும் சென்றனர். 2 அவர்கள் கூறியது: “இஸ்ரயேல் மக்களின் உரிம...
https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-36
153
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 1 – திருவிவிலியம்
தோற்றுவாய் 1 யோர்தானுக்கு அப்பால் பாரானுக்கும் தோப்பேல், லாபான், அட்சரோத்து, திசகாபு ஆகியவற்றிற்கும் இடையே, சூபுக்குக் கிழக்கே அமைந்த அராபா பாலை நிலத்தில் இஸ்ரயேலர் அனைவருக்கும் மோசே உரைத்த வார்த்தைகள் இவையே. 2 காதேசுபர்னேயா என்ற அந்த இடம் ஓரேபிலிருந்து சேயிர் மலை வழியாகப் பதினொரு நாள் பயணத் தொலையில் இருந்தது. 3 இஸ்ரயே...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-1
154
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 2 – திருவிவிலியம்
பாலைநிலத்தில் கழிந்த ஆண்டுகள் 1 பின்னர், ஆண்டவர் எனக்குச் சொல்லியபடி, நாங்கள் புறப்பட்டுச் செங்கடல் நெடுஞ்சாலை வழியாகப் பாலைநிலத்தில் பயணம் செய்து, பல நாள்கள் சேயிர் மலைநாட்டைச் சுற்றித் திரிந்தோம். 2 அப்பொழுது ஆண்டவர் என்னிடம் உரைத்தது; 3 நீங்கள் நெடுங்காலமாக இந்த மலைப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளீர்கள்; இப்போது வடக்...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-2
155
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 3 – திருவிவிலியம்
மன்னன் ஓகின்மீது இஸ்ரயேல் வெற்றிகொள்ளல் (எண் 21:31-35) 1 பின்பு, நாம் திரும்பி பாசானுக்குப் போகும் வழியில் சென்றோம். பாசானின் மன்னன் ஓகு, தம் மக்கள் அனைவரோடும் நம்மை எதிர்கொண்டு எதிரேயியில் போரிடப் புறப்பட்டு வந்தான். 2 அப்பொழுது ஆண்டவர், என்னை நோக்கிக் கூறியது, ‘அவனுக்கு நீ அஞ்சாதே. ஏனெனில், அவனையும், அவன் மக்கள் அனைவ...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-3
156
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 4 – திருவிவிலியம்
கீழ்ப்படியுமாறு மோசே இஸ்ரயேலரை ஊக்குவித்தல் 1 இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். 2 நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்ற...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-4
157
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 5 – திருவிவிலியம்
பத்துக் கட்டளைகள் (விப 20:1-17) 1 மோசே இஸ்ரயேலர் அனைவரையும் வரவழைத்துக் கூறியதாவது: “இஸ்ரயேலரே, உங்கள் காதுகள் கேட்க நான் இன்று கூறப்போகும் நியமங்களையும் முறைமைகளையும் கேளுங்கள். அவைகளைக் கற்று, கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். 2 கடவுளாகிய ஆண்டவர் ஓரேபில் நம்மோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். 3 நம் மூதாதையரோடு ஆண்...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-5
158
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 6 – திருவிவிலியம்
மாபெரும் கட்டளை 1 உங்களுக்குக் கற்றுக்கொடுக்குமாறும், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில் கடைப்பிடிக்குமாறும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்ட கட்டளைகளும், நியமங்களும், முறைமைகளும் இவைகளே. 2 நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளைய...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-6
159
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 7 – திருவிவிலியம்
ஆண்டவரின் சொந்த மக்கள் (விப 34:11-16) 1 நீ உரிமையாக்கிக் கொள்ளைப்போகும் நாட்டில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச்செய்து, உன்னைவிட வலிமையிலும் எண்ணிக்கையிலும் மிகுந்த மக்களாகிய இத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் எனும் ஏழு மக்களினங்களையும் உன் கண்முன்னே விரட்டியடித்து, 2 உன் கடவ...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-7
160
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 8 – திருவிவிலியம்
உடைமை ஆகவிருக்கும் வளநாடு 1 இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். அதனால், நீங்கள் வாழ்ந்து, பெருகி, ஆண்டவர் உங்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டில் புகுந்து, அதை உங்கள் உடைமையாக்கிக் கொள்வீர்கள். 2 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களை...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-8
161
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 9 – திருவிவிலியம்
மக்களின் கீழ்ப்படியாமை 1 இஸ்ரயேலரே, செவிகொடுங்கள்! நீங்கள் இன்று யோர்தானைக் கடந்து, உங்களைவிட எண்ணிக்கையும் வலிமையும் மிகுந்த நாடுகளையும், வானளாவிய மதில்கள் கொண்ட மாபெரும் நகர்களையும் கைப்பற்றுவீர்கள். 2 அந்த மக்கள், எண்ணிக்கையிலும் உயரத்திலும் மிகுந்த ஏனாக்கின் வழிமரபினர். அவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ‘ஏனாக்...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-9
162
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 10 – திருவிவிலியம்
பத்துக் கட்டளைகளை மோசே மீண்டும் பெறுதல் (விப 34:1-10) 1 அந்நாளில் ஆண்டவர் என்னை நோக்கி, ‘முன்னவைப்போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்துக் கொண்டு மலைமேல் ஏறி என்னிடம் வா. மரத்தால் ஆன பேழையையும் உனக்காகச் செய்துகொள். 2 நீ உடைத்துப் போட்ட முன்னைய பலகைகளில் இருந்த வார்த்தைகளையே நான் இப்பலகைகளிலும் எழுதுவேன். நீ அவற்றைப் பேழை...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-10
163
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 11 – திருவிவிலியம்
ஆண்டவரின் மேன்மை 1 ஆகையால், நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு கூருங்கள். அவருடைய நெறிகளையும், நியமங்களையும், முறைமைகளையும், கட்டளைகளையும் எந்நாளும் கடைப்பிடியுங்கள். 2 உங்கள் பிள்ளைகள், கடவுளாகிய ஆண்டவரின் படிப்பினைகள் அறிந்ததுமில்லை; பார்த்ததுமில்லை. அவர்தம் மாட்சி, வலிய கரம், ஓங்கிய புயம், 3 எகிப்திய மன்னனாம...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-11
164
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 12 – திருவிவிலியம்
வழிபாட்டிற்கான ஒரே இடம் 1 மண்ணில் வாழும் நாளெல்லாம், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளுமாறு, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் கவனமாய்ப் பின்பற்ற வேண்டிய நியமங்களும் முறைமைகளும் இவையே: 2 நீங்கள் விரட்டியடிக்கப்போகும் மக்களினங்கள் தங்கள் தெய்வங்களுக்கு, உயர்ந்த மலைகளின்மீதும், குன்ற...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-12
165
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 13 – திருவிவிலியம்
1 உங்கள் நடுவில் ஓர் இறைவாக்கினன் அல்லது கனவு காண்பவன் தோன்றி உங்களிடையே ஓர் அடையாளம் அல்லது அருஞ்செயல் காட்டுவேன் என்று சொல்லலாம். 2 அவன் சொல்வதுபோல் அடையாளம் அல்லது அருஞ்செயல் நடக்கலாம். அதன்பின் அவன், ‘வாருங்கள், வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் புரிவோம்’ என்று கூறலாம். அவை நீங்கள் அறியாதவை. 3 அந்த...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-13
166
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 14 – திருவிவிலியம்
துக்கம் கொண்டாடும் முறைக்குத் தடை 1 நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் மக்கள். எனவே, இறந்தவருக்காக உங்கள் உடலைச் சிதைத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் தலைமுடியை மழித்துக்கொள்ளவும் வேண்டாம். 2 ஏனெனில், நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம். மண்ணுலகின்மீது உள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் தனிச்சொத்தாக ஆண்டவ...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-14
167
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 15 – திருவிவிலியம்
ஏழாம் ஆண்டு (லேவி 25:1-7) 1 ஏழாம் ஆண்டின் முடிவில் நீ விடுதலை அளிப்பாய். 2 விடுதலையின் விவரம் இதுவே; ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனுக்குக் கொடுத்த கடனிலிருந்து அவனை விடுதலை செய்யட்டும். அது ஆண்டவருக்கெனக் குறிக்கப்பட்ட விடுதலை ஆண்டாகையால், தனக்கு அடுத்திருப்பவனுக்கோ தன் சகோதரனுக்கோ கொடுத்த கடனைத் தண்டல் செய்ய வேண்டாம். 3...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-15
168
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 16 – திருவிவிலியம்
பாஸ்காத் திருவிழா (விப 12:1-20) 1 ஆபீபு மாதத்தை நினைவில்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவருக்கெனப் பாஸ்காவைக் கொண்டாடு. ஏனெனில் ஆபீபு மாதத்தில்தான், ஓர் இரவில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்தார். 2 தம் பெயர் விளங்கும் பொருட்டு ஆண்டவர் தெரிந்து கொள்ளும் இடத்தில், உன் ஆடுமாடுகளிலிருந்து உன் ஆண்டவராக...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-16
169
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 17 – திருவிவிலியம்
1 ஊனமோ வேறு எந்தக் குறையோ உள்ள மாட்டையாவது ஆட்டையாவது உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலி செலுத்த வேண்டாம். ஏனெனில், அதை உன் கடவுளாகிய ஆண்டவர் வெறுக்கிறார். 2 கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கிற நகர்கள் ஒன்றில், ஓர் ஆண் அல்லது பெண், உன் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையை மீறி, அவருக்கு எதிராகக் குற்றம் செய்வதாக உனக்குத் தெ...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-17
170
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 18 – திருவிவிலியம்
குருக்களுக்கான பங்கு 1 லேவிய குருக்களுக்கும் அனைத்து லேவிய குலத்தாருக்கும் இஸ்ரயேல் மக்களிடையே பங்கும் சொத்துரிமையும் இல்லை. ஆண்டவருக்கெனச் செலுத்தப்படும் எரிபலிகளையும் அவருக்கே உரியவைகளையும் அவர்கள் உண்பார்கள். 2 அவர்கள் சகோதரர்கள் நடுவே அவர்களுக்கு உரிமைச்சொத்து இல்லாதிருக்கட்டும். ஆண்டவர் அவர்களுக்கு வாக்களித்தபடி அ...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-18
171
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 19 – திருவிவிலியம்
அடைக்கல நகர்கள் (எண் 35:9-28; யோசு 20:1-9) 1 கடவுளாகிய ஆண்டவர் வேற்றினத்தாரை வேரறுத்து, அவர்களின் நாடுகளை உனக்குக் கொடுப்பார். நீ அவற்றை உடைமையாக்கி, அவர்களது நகர்களிலும் வீடுகளிலும் குடியேறுவாய். 2 நீ உடைமையாக்கிக்கொள்ளும்படி, உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கவிருக்கும் நாட்டினிடையே மூன்று நகர்களை உனக்கென ஒதுக்கி வை. 3 கொ...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-19
172
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 20 – திருவிவிலியம்
போரைப் பற்றிய விதிமுறைகள் 1 நீ உன் பகைவருக்கு எதிராகப் போருக்குப் போகையில், உன்னிடம் உள்ளதைவிட மிகுதியான குதிரைகளையும், தேர்களையும், பெரும் படையையும் நீ கண்டால், அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில், எகிப்திலிருந்து உன்னை வெளியே கூட்டிவந்த உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னோடு உள்ளார். 2 நீ போரிடத் தொடங்குமுன், குருக்கள் முன்வந்த...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-20
173
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 21 – திருவிவிலியம்
துப்புத் துலங்காத கொலைகள் குறித்த விதிமுறைகள் 1 நீ உடைமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுத்த மண்ணில் திறந்த வெளியில் ஒருவன் கொலையுண்டு கிடக்க, அவனைக் கொலைசெய்தவன் யாரென்று தெரியாதிருந்தால், 2 உன் தலைவர்களும் நீதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலையுண்டு கிடப்பவனைச் சுற்றிலுமுள்ள நகர்களுக்கு உள்ள தொலைவு எவ்வளவ...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-21
174
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 22 – திருவிவிலியம்
1 உன் இனத்தவன் ஒருவனின் ஆடோ மாடோ வழிதவறித் திரிவதைக் கண்டும், அதைக் காணாதவன்போல் இருந்துவிடாதே. அதை உன் இனத்தானிடம் திருப்பிக் கொண்டு போ. 2 உனக்கு அடுத்திருப்பவன் உன்னிடமிருந்து வெகு தொலையில் இருந்தால், அல்லது அவன் யாரென்று நீ அறியாதிருந்தால், அதை உன் வீட்டுக்குள் கொண்டுபோய் உன்னோடு வைத்துக்கொள். உனக்கு அடுத்திருப்பவன்...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-22
175
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 23 – திருவிவிலியம்
ஆண்டவரின் மக்களிடமிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் 1 விதையடிக்கப்பட்டவனும் ஆண் குறி அறுக்கப்பட்டவனும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது. 2 வேசித்தனத்தால் பிறந்தவன், அவனது பத்தாம் தலைமுறை வரைக்கும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது. 3 அம்மோனியரும் மோவாபியரும், அவர்களது பத்தாம் தலைமுறைவரைக்கும், அவர்களைச் சார்ந்த எ...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-23
176
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 24 – திருவிவிலியம்
மணவிலக்கும் மறுமணமும் 1 ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடியபின், அவளது அருவருக்கத்தக்க செயலைக் கண்டு அவள்மேல் அவனுக்கு விருப்பமில்லாமற்போனால், அவன் முறிவுச் சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான். 2 அவள் அவனது வீட்டைவிட்டு வெளியே சென்று வேறொருவனுக்கு மனைவி ஆகிறாள். ...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-24
177
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 25 – திருவிவிலியம்
1 மனிதரிடையே வழக்கு ஏற்பட்டு அவர்கள் நீதிமன்றத்தை நாடும்பொழுது, நீதிபதிகள் நேர்மையாளரை நேர்மையாளர் என்றும், குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்ப்பிடுவர். 2 குற்றவாளி அடிபட வேண்டியவனென்றால், நீதிபதி அவனைப் படுக்கச்செய்து தம் முன்னிலையில் அடிக்கச் செய்வார். அவனது குற்றத்திற்கு ஏற்ப அடிகளின் எண்ணிக்கையும் இருக்கும். 3 அவ...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-25
178
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 26 – திருவிவிலியம்
அறுவடைக் காணிக்கைகள் 1 உனது உரிமைச்சொத்தாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டிற்குள் சென்று, அதை உன் உடைமையாக்கி, அதில் நீ குடியேறும்போது, 2 அந்த நாட்டின் நிலத்து முதற்பலன் அனைத்தையும் எடுத்துக்கூடையில் வைத்து, உன் கடவுளாகிய ஆண்டவர் தம் பெயர் விளங்குமாறு தேர்ந்து கொள்ளும் இடத்திற்குக் கொண்டுபோ. 3 அ...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-26
179
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 27 – திருவிவிலியம்
கடவுளின் கட்டளைகள் கற்களில் எழுதப்படல் 1 மோசே இஸ்ரயேலின் தலைவர்களோடு சேர்ந்து மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: ‘இன்று நான் உங்களுக்கு விதிக்கும் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள். 2 நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் நுழையும் நாளில், பெரிய கற்களை நாட...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-27
180
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 28 – திருவிவிலியம்
கீழ்ப்படிதலுக்கான ஆசிகள் (லேவி 26:3-13; இச 7:12-24) 1 உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிக்கொடு. நான் இன்று உனக்கு விதிக்கும் அவருடைய கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. அப்போது, உலகிலுள்ள மக்களினங்கள் அனைத்திற்கும் மேலாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை உயர்த்துவார். 2 உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்க...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-28
181
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 29 – திருவிவிலியம்
மோவாபு நாட்டில் ஆண்டவர் இஸ்ரயேலுடன் செய்துகொண்ட உடன்படிக்கை 1 ஓரேபில் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைத் தவிர, மேவாபு நாட்டில் அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு மோசேக்குக் கட்டளையிட்டு உரைத்த வார்த்தைகள் பின்வருமாறு: 2 மோசே இஸ்ரயேலர் அனைவரையும் வரவழைத்துக் கூறியது: எகிப்து நாட்டில் பார்வோ...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-29
182
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 30 – திருவிவிலியம்
மறுவாழ்வும் ஆசியும் பெறுதலுக்கான நிபந்தனைகள் 1 இவை எல்லாம் நிகழும்போது, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைச் சிதறடித்துள்ள மக்களினங்களுக்கிடையே வாழ்கையில், நான் உனக்கு முன்னே வைத்த ஆசி, சாபம் ஆகியவற்றை, உன் உள்ளத்தில் சிந்தனை செய். 2 நான் இன்று உனக்கு அளிக்கும் அனைத்துக் கட்டளைகளின்படி உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா. நீ...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-30
183
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 31 – திருவிவிலியம்
தமக்கு அடுத்துவரும் தலைவராக யோசுவாவை மோசே ஏற்படுத்தல் 1 மோசே தொடர்ந்து பின்வரும் வார்த்தைகளை இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறினார்: 2 அவர் சொன்னது: “இன்று எனக்கு வயது நூற்று இருபது. இனி என்னால் நடமாட இயலாது. மேலும், ‘நீ யோர்தானைக் கடக்க மாட்டாய்’ என்று ஆண்டவர் எனக்குக் கூறியுள்ளார். 3 உன் கடவுளாகிய ஆண்டவரே உன்முன் செல்வார். ...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-31
184
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 32 – திருவிவிலியம்
1 வானங்களே! நான் பேசுவேன்; செவிகொடுப்பீர்: பூவுலகே! என் சொல்லை உற்றுக்கேள். 2 பெருமழை பைந்தளிர்மீது பொழிவதுபோல், மென்சாரல் பசும்புல்மீது விழுவதுபோல், என் அறிவுரை மழையெனப் பெய்திடுக! என் சொற்கள் பனியென இறங்கிடுக! 3 நான் ஆண்டவரின் பெயரைப் பறைசாற்றுவேன்; நம் கடவுளின் மாட்சியைப் பாராட்டுவேன். 4 அவரே பாறை! அவர் செயல் நிறைவா...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-32
185
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 33 – திருவிவிலியம்
இஸ்ரயேலின் குலங்களுக்கு மோசேயின் ஆசிகள் 1 கடவுளின் அடியவரான மோசே, தாம் இறப்பதற்குமுன் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது: 2 ஆண்டவர் சீனாயினின்று வந்தார்; சேயிரினின்று அவர்களுக்குத் தோன்றினார்; பாரான் மலையினின்று அவர்கள் மீது ஒளிர்ந்தார்; பல்லாயிரம் புனிதர் புடைசூழ வந்தார்; அவரது வலப்புறத்தினின்று மின்னல் ஒளிர் தி...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-33
186
இணைச் சட்டம்
இணைச் சட்டம் அதிகாரம் – 34 – திருவிவிலியம்
மோசேயின் இறப்பு 1 அதன்பின், மோசே மோவாபுச் சமவெளியிலிருந்து எரிகோவுக்குக் கிழக்கே நெபோ மலையில் உள்ள பிஸ்காவின் உச்சிக்கு ஏறிச் சென்றார். ஆண்டவர் அவருக்குத் தாண் வரையில் உள்ள கிலயாது நாடு முழுவதையும் காட்டினார். 2 மேலும், நப்தலி முழுவதையும் எப்ராயிம் நிலப்பகுதியையும், மனாசே நிலப்பகுதியையும் யூதாவின் நிலப்பகுதி முழுவதையும...
https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-34
187
யோசுவா
யோசுவா அதிகாரம் – 1 – திருவிவிலியம்
கானானைக் கைப்பற்ற யோசுவாவுக்கு அழைப்பு 1 ஆண்டவரின் ஊழியர் மோசே இறந்தபின், நூனின் மகனும் மோசேயின் உதவியாளருமாகிய யோசுவாவிடம் ஆண்டவர் பின்வருமாறு கூறினார்: 2 “என் ஊழியன் மோசே இறந்துவிட்டான். இப்பொழுது நீ புறப்பட்டு, யோர்தானைக் கடந்து, இந்த மக்கள் அனைவரோடும் நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் செல். 3 மோசேக்கு நா...
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-1
188
யோசுவா
யோசுவா அதிகாரம் – 2 – திருவிவிலியம்
யோசுவாவின் ஒற்றர்களும் இராகாபும் 1 நூனின் மகனாகிய யோசுவா சித்திமிலிருந்து இரண்டு ஒற்றர்களை வேவு பார்க்க அனுப்பினார். அவர்களிடம், “நீங்கள் சென்று நிலப்பகுதியையும், குறிப்பாக எரிகோ நகரையும் பாருங்கள்” என்றார். அவர்கள் சென்று இராகாபு என்ற பெயருள்ள விலைமாதின் வீட்டுக்கு வந்து, அங்குத் தங்கினர். 2 சில இஸ்ரயேலர், இரவில் நாட்...
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-2
189
யோசுவா
யோசுவா அதிகாரம் – 3 – திருவிவிலியம்
இஸ்ரயேலர் யோர்தானைக் கடத்தல் 1 யோசுவா அதிகாலையில் விழித்தெழுந்தார். அவரும் இஸ்ரயேல் மக்களனைவரும் சித்திமிலிருந்து புறப்பட்டு யோர்தான் வந்தடைந்தனர். அதைக் கடக்குமுன் அங்கே தங்கினர். 2 மூன்று நாள்கள் கழிந்தபின் மேற்பார்வையாளர் பாளையமெங்கும் போய், 3 மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: “உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக...
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-3
190
யோசுவா
யோசுவா அதிகாரம் – 4 – திருவிவிலியம்
பன்னிரு நினைவுக் கற்கள் 1 மக்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்து முடிந்தபின் ஆண்டவர் யோசுவாவை நோக்கி, 2 “மக்களிலிருந்து குலத்திற்கு ஒருவராகப் பன்னிருவரை நீங்கள் தேர்ந்தெடுங்கள். அவர்களுக்குப் பின்வருமாறு கட்டளையிடுங்கள். 3 “குருக்களின் பாதங்கள் இருக்கும் இடத்திலிருந்து பன்னிரு கற்களை எடுத்து உங்களுடன் கொண்டு வாருங்கள். அவற...
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-4
191
யோசுவா
யோசுவா அதிகாரம் – 5 – திருவிவிலியம்
1 மேலை யோர்தானில் இருந்த எமோரிய நாட்டு அரசர்களும் கடலுக்கு அருகிலிருந்த கானானிய மன்னர்களும் ஆண்டவர் யோர்தான் நீரை இஸ்ரயேலர் கண்முன் அவர்கள் கடக்கும் வரையில் வற்றச்செய்தார் என்று கேள்வியுற்றபொழுது, அவர்களின் இதயங்கள் கலக்கமுற்றன. இஸ்ரயேலர்முன் அவர்கள் மனந்தளர்ந்தனர். கில்காலில் விருத்தசேதனம் 2 அப்பொழுது ஆண்டவர் யோசுவாவி...
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-5
192
யோசுவா
யோசுவா அதிகாரம் – 6 – திருவிவிலியம்
எரிகோவைக் கைப்பற்றல் 1 இஸ்ரயேல் மக்களுக்கு அஞ்சி, எரிகோ இறுக்கமாக அடைக்கப்பட்டது. ஒருவரும் வெளியே வரவுமில்லை; உள்ளே போகவுமில்லை. 2 கடவுள் யோசுவாவிடம், “பார்! எரிகோவையும், அதன் மன்னனையும், அதன் வலிமை மிக்க போர்வீரர்களையும் உன் கையில் ஒப்படைத்துவிட்டேன். 3 போர்வீரர்களாகிய நீங்கள் அனைவரும் நகரை வளைத்துக் கொண்டு அதை ஒருமுற...
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-6
193
யோசுவா
யோசுவா அதிகாரம் – 7 – திருவிவிலியம்
ஆக்கான் செய்த பாவம் 1 இஸ்ரயேல் மக்கள் அழிவுக்குரியவைபற்றிய கட்டளையை மீறினார்கள். யூதா குலத்தைச் சார்ந்த செராகின் மகனாகிய சபதியின் மகன் கர்மிக்குப் பிறந்த ஆக்கான் என்பவன் அழிவுக்குரியவற்றிலிருந்து சிலவற்றைக் கவர்ந்து கொண்டான். இஸ்ரயேல் மக்கள் மீது ஆண்டவர் சினம் மூண்டது. 2 பெத்தேலுக்குக் கிழக்கே, பெத்தாவேனுக்கு அருகில் இ...
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-7
194
யோசுவா
யோசுவா அதிகாரம் – 8 – திருவிவிலியம்
ஆயி நகரைக் கைப்பற்றல் 1 ஆண்டவர் யோசுவாவிடம், “அஞ்சாதே, கலங்காதே; உன்னுடன் எல்லாப் போர்வீரர்களையும் சேர்த்துக் கொள். ஆயியை நோக்கிப் புறப்பட்டுச்செல்! இதோ! ஆயியின் மன்னனையும், அதன் மக்களையும், அவனது நகரையும் அவனது நாட்டையும் உன் கையில் ஒப்படைக்கிறேன். 2 எரிகோவிற்கும் அதன் மன்னனுக்கும் செய்ததுபோல் ஆயிக்கும் அதன் மன்னனுக்க...
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-8
195
யோசுவா
யோசுவா அதிகாரம் – 9 – திருவிவிலியம்
கிபயோனியர் யோசுவாவை ஏமாற்றல் 1 யோர்தானுக்கு இப்பக்க மலைப்பகுதிகளிலும் பள்ளத்தாக்கிலும் பெருங்கடலின் கரை முழுவதிலும் லெபனோனின் முன்பக்கம்வரை இருந்த மன்னர்கள் அனைவரும் இத்தியர், எமோரியர், கானானியர், இவ்வியர், எபூசியர் ஆகியோரும் இதைப்பற்றிக் கேள்வியுற்றனர். 2 யோசுவாவுடனும் இஸ்ரயேலருடனும் போர் தொடுக்க அவர்கள் ஒன்றுகூடினர்....
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-9
196
யோசுவா
யோசுவா அதிகாரம் – 10 – திருவிவிலியம்
யோசுவா எமோரியரைத் தோற்கடித்தல் 1 யோசுவா ஆயியைக் கைப்பற்றி அழித்தார் என்றும், எரிகோவிற்கும் அதன் மன்னனுக்கும் செய்தது போல ஆயிக்கும் அதன் மன்னனுக்கும் செய்தார் என்றும் கிபயோன் குடிமக்கள் இஸ்ரயேலுடன் சமாதானம் செய்துகொண்டு அவர்களிடையே வாழ்கின்றார்கள் என்றும், எருசலேமின் மன்னன் அதோனிசெதக்கு கேள்விப்பட்டான். 2 அவன் மிகவும் அ...
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-10
197
யோசுவா
யோசுவா அதிகாரம் – 11 – திருவிவிலியம்
யாபினையும் பிற மன்னர்களையும் தோற்கடித்தல் 1 ஆட்சோர் மன்னன் யாபின் இதைக் கேள்வியுற்று மாதோன் மன்னன் யோபாபுக்கும், சிம்ரோன் மன்னனுக்கும், அக்சாபு மன்னனுக்கும் ஆளனுப்பினான். 2 மலைப்பகுதியின் வடபுறத்திலும், கினரேத்திற்குத் தெற்கில் அராபாவிலும், சமவெளிப்பகுதிகளிலும் மேற்கே நாபோத்தோரில் இருந்த மன்னர்களுக்கும் 3 கிழக்கிலும் ம...
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-11
198
யோசுவா
யோசுவா அதிகாரம் – 12 – திருவிவிலியம்
மோசே தோற்கடித்திருந்த அரசர்கள் 1 யோர்தானுக்கு அப்பால் கதிரவன் உதிக்கும் பக்கம் அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரை கிழக்குப் பகுதியில் அராபா முழுவதிலும் இஸ்ரயேலர் கைப்பற்றிய நாடுகளின் அரசர்கள் இவர்களே; 2 எமோரிய மன்னன் சீகோன் எஸ்போனில் வாழ்ந்தான். அவன் அர்னோன் பள்ளத்தாக்கின் எல்லையிருக்கும் அராயேரிலிருந்து பள்ளத...
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-12
199
யோசுவா
யோசுவா அதிகாரம் – 13 – திருவிவிலியம்
யோசுவாவுக்கு ஆண்டவர் இட்ட கட்டளை 1 யோசுவா வயதாகி முதுமை அடைந்தார். ஆண்டவர் அவரிடம், “உனக்கு வயதாகி, நீ முதுமை அடைந்துவிட்டாய். இன்னும் உடைமையாக்க வேண்டிய நிலம் ஏராளமாக உள்ளது. 2 எஞ்சியுள்ள நிலங்கள் இவையே; பெலிஸ்தியர், கெசூரியரின் எல்லாப் பகுதிகள். 3 எகிப்துக்கு எதிரில் உள்ள சீகோரிலிருந்து வடக்கில் எக்ரோன் எல்லைவரை, கான...
https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-13