text stringlengths 693 1.64k | author stringclasses 1
value | genre stringclasses 1
value | page int64 1 20 |
|---|---|---|---|
புதுமைப்பித்தன் சிறுகதை: பல ரித்த
,
ரு மிண்தொகுப்புத்திட்டட் எண;
பாகம் 4 , சிறுகதைகள் 61-90
putumaippittan
part 4, short stories 61-90
In Tamil script, unicodeutf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this
work.
This e-text has been prepared using Goog... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 1 |
projectmadurai org
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact 2
பாகம் 4 , சிறுகதைகள் 61-90
உள்ளடக்கம்
61. நொண்டி 76. சாப விமோசனம்
62. ஒப்பந்தம் 77. சாளரம்
63. ஒரு கொலை அனுபவம் 78. சாமாவின் தவறு
64. பால்வண்ணம் பிள்ளை 79. சாயங்கால மயக்கம்
65. பறிமுதல் 80. சமாதி
66. பாட்டியின்... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 2 |
ரயிலில், ஒருவரும் இல்லாத தனி வண்டியாகப் பார்த்து, செளகரியமாகப் படுக்கையை
விரித்துவிட்டு, தொந்தரவில்லாமல் பிரயாணம் செய்யலாம் என்று
நினைத்துக்கொண்டே உட்காருமுன், மறுபடியும் வண்டியின் கதவு திறக்கப்பட்டது
"ஜாக்கிரதையாக ஏறுங்கள்; தரையிலிருந்து படி வெகு உயரமாக இருக்கிறது" என்றது
ஒரு குரல் 3
"அதற்கென்ன, நான் கெட்டியாகத்தான் ... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 3 |
"
"செளகரியமாய்ப் போய்விட்டு வரணும்" என்று கும்பிட்டான்
"உன் உடம்பையும் பார்த்துக் கொள்" என்று ஒரு ரூபாயை அவன் கையில் கொடுத்து
விட்டுச் சிரித்தார் 4
அவனும் கதவைச் சாத்திக் கொண்டு போய்விட்டான்.
வந்தவருக்கு வயது முப்பது அல்லது முப்பத்தைந்திற்கு மேல் இராது; தலை பூராவும்
நரைத்துவிட்டது. கதர் உடைதான். நல்ல கறுத்து அடர்ந்த ம... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 4 |
அவரும் கொஞ்சம் யோசித்தார் "ஆமாம் ஸார், நாம் சென்னையில் நான்கு
வருஷங்களுக்கு முன் சந்தித்ததாக ஞாபகம்" என்றார் 5
"ஆமாம்! ஆமாம்! தாங்கள்தான் தொண்டர் ராமகிருஷ்ணனோ?"
"ஆமாம்! இந்தக் கால்கள் தடியடியில் போகும்வரை தொண்டனாக இருந்தேன்."
நினைவு வந்து விட்டது. நான்கு வருடங்களுக்கு முன் என்ன அழகு? என்ன வாலிபம்!
மெலிந்ததாயினும் நல்ல... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 5 |
இதைவிட வேறு மாதிரி என் மனது கதை திரிக்க ஆரம்பித்தது ஒரு வேளை அவன்
கால்களை இழக்குமுன் திருமணமாகியிருக்கலாம் காலிழந்த கணவனின் பத்தினிப் 6
பெண். அவனது சுகத்திற்காகவே தன்னைத் தியாகம் செய்து கொள்ளும் ஒரு பத்தினிப்
பெண்ணின் உருவம் எனது மனக் கண்ணின் முன் தோன்றலாயிற்று.
அவனுக்கு வாழ்க்கை, சுகமா அல்லது இன்னலா, அதை அறியும்படி ... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 6 |
" 7
"மிஸ்டர் பார்வதி நாதனை..."
"தங்கள் காயங்கள்தான் அதற்குக் காரணம் என்றும்..." முகத்தை நன்றாகக்
கவனித்தேன். முகம் வெட்கத்தால் சிவந்தது.
தோற்றுப்போன கட்சியை தோற்றுவிட்டது என்று தெரிந்த பிறகும் வாதிப்பவர் போல்,
ஒரு பரபரப்புடன் பேசிக்கொண்டே போனார்.
"மிஸ்டர் பார்வதிநாதனுடைய பெயருடன் என்னையும் முடிச்சு போடுவது வெறும்
அபத்த... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 7 |
"மனோன்மணியம்மாளுக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா " என்று திடீரென்று
கேட்டேன் 8
"ஒரு பெண்ணும் இரண்டு ஆணும்; இவைகள் எல்லாம் அவர்களுக்குத்தான். அவள்
புருஷன் என்மேல் அதிகப் பிரியமாக இருக்கிறார்!"
அதற்குள் அந்தச் சிறு டன்னல் வழியாக ரயில் சென்று பிளாட்பாரத்தில் நின்றது.
அவருக்கு உதவி செய்யும்படி நான் எழுந்தேன். அதற்குள் ஒரு ம... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 8 |
ஒரு நாள் காலை பிள்ளையவர்கள், தாம்பிரவர்ணியின் ஸ்நான இன்பம், நீண்ட பூஜை
முதலியவற்றுக்கு முற்றுப்புள்ளியான காலை போஜனத்தை முடித்துக் கொண்டதும், சுக
ஜீவனத்தின் குதூகலத்தை அனுபவித்தவராய், "ஏளா, அங்கே என்ன செய்யுதே" என்று
தமது பத்தினியைக் கூப்பிட்டார் 9
"என்ன, நீங்களா கூப்பிட்டிய; இன்னா வாரேன்."
"நம்ம குட்டிக்கு" - பார்வதிந... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 9 |
அவுஹளும் அப்படித்தான்
என்னமோ ரெண்டு ஆயிரத்துக்கு செய்வாஹ இன்னு சொல்லி இருந்தாஹ " 10
"இம்புட்டுத்தானே! சதி, சதி. பேச்செ விட்டுத் தள்ளு. நம்ம பேட்டைப்பிள்ளை
ஐயாயிரம் நகை மருக, கலியாணச் செலவு ஒரு ரெண்டாயிரம் யென்று சொன்னாரே!"
"ஆமா, பொண்ணு கறுப்பில்லியா? எதுக்கும் கேட்டுப் பாருங்களேன்."
"சதி, நீ என்ன சொல்லுதே?"
"பாத்தா என... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 10 |
இந்த மாதிரி தகப்பனார்
பேசியது இதுதான் முதல் தரம் முகம் வெட்கத்தால் சிவந்தது ஒன்றும் பேசாமல் 11
மெத்தைக்கு ஏறினவன். "நாளைக்குப் புறப்பட வேண்டும்" என்று சொல்லிவிட்டுச்
சென்றுவிட்டான்.
2
பெண்ணை எல்லாம் போய்ப் பார்த்துவிட்டு வந்தாகிவிட்டது. சங்கரலிங்கம்
பிள்ளையின் மனைவிக்கு சிங்கிகுளத்துப் பெண் பேரில் நோக்கம்.
சங்கரலிங்க... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 11 |
அம்மாளு ரெண்டு எலையைப் போடு "
என்று துரிதப்படுத்தினார் 12
அவருடைய தர்மபத்தினியும், "வாருங்க! சேவிக்கேன்!" என்று வரவேற்றுவிட்டு, அவசர
அவசரமாகப் பெருக்கிவிட்டு, ஜமுக்காளத்தை எடுத்து விரித்து, வெற்றிலைச்
செல்லத்தை எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
"நாங்கள் எல்லாம் காப்பி ஆச்சு. நீங்கள் ஆச்சா? இல்லவிட்டா முடிச்சுக்கொண்ட... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 12 |
நீங்க காலைத்
தேச்சா பிரயோசனமில்லை நல்ல இடம் பையனுக்கு நல்ல அதிர்ஷ்டம் கவர்மெண்டு 13
வேலை. இனிசூபெக்டரு, தாசில்தாரா வரலாம் உங்க பெண்ணுக்கு ராஜயோகம்!"
என்று மத்தியஸ்தம் பேசினார் நாவன்னா.
"சதி! பொறவு நீங்க சொல்லுறப்பா என்னா?" என்றார் சிங்கிகுளத்துப் பிள்ளை.
"வேறெ என்ன அய்யா? இப்பவே வெத்தலை பாக்கு கைமாறிடுத்து. வர
வியாழக... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 13 |
அந்த நங்கை ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் அவன் மனைவியாக இருக்கச்
சம்மதித்தாள் இருவரும் கடற்கரைக்குச் செல்லுகிறார்கள் 14
அந்தச் சிங்கிகுளத்துப் பெண் மூவாயிரம் ரூபாயைப் பணயமாக வைத்து, அவனுடன்
வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ளச் சம்மதிக்கும் பொழுது, ஐந்து ரூபாய்க்கு
இரண்டு மணி நேரம் சரிதானே?
மணிக்கொடி, 05-08-1934
63. ஒரு ... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 14 |
ஏன் விளக்கு அணைய
வேண்டும் இரவு பூராவும் எரிவதென்றால் முனிஸிபாலிட்டியாருக்கு குடி
முழுகிவிடும்போல் இருக்கிறது 15
அந்த இருட்டில் பாதையின் திருப்பத்திலிருந்து இன்னொரு உருவம் வருகிறது. ஏன்
இப்படி நடக்கவேண்டும்? ஆசாமியைப் பார்த்தால் பொம்மை மாதிரி. கிட்ட
நெருங்கட்டும். அதைத்தான் பார்ப்போம். இதென்ன அதிசயம்? அவனும் நான் தான்.... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 15 |
நெருங்கிவிட்டான்
"அய்யோ கொல்கிறானே ' 16
மூன்றும் என் குரல். எல்லாம் இருள். ஒன்றையும் காணோம்!
விழித்தேன். பக்கத்தில் எனது நண்பன். 'பகலில் என்ன தூக்கம்?' என்று முதுகைத்
தட்டிக்கொண்டிருந்தான். எதிரே எழுதுகோல், காகிதம், இத்யாதி. துப்பறியும் நாவல்
எழுதுவது என்றால் லேசா? தூக்குத் தண்டனை இல்லாமல் ஆட்களைக் கொல்ல
வேண்டும். பிற... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 16 |
இவர் மெக்ஸிகோ தென் அமெரிக்காவில் இருக்கிற
தென்றார் இவருடைய நண்பர் பூகோள சாஸ்திரம் வேறு மாதிரிக் கூறுகிறதென்றார் 17
பால்வண்ணம் பிள்ளை தமது கட்சியை நிரூபிப்பதற்காக வெகு வேகமாக வீட்டிற்கு
வந்தார்.
பால்வண்ணம் பிள்ளைக்கும் அவருடைய மனைவியாருக்கும் கர்ப்பத் தடையில்
நம்பிக்கை கிடையாது. அதன் விளைவு வருஷம் தவறாது ஒரு குழந்தை. த... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 17 |
பால்வண்ணம்
பிள்ளையின் மனைவிக்கும் அதே நிலை ஏற்பட்டது
பிள்ளையவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது, அவர் ஸ்கூல் பைனல் வகுப்பில்
உபயோகித்த பூகோளப் படம் எங்கு இருக்கிறது, மாடியிலிருக்கும் ஷெல்பிலா, அல்லது
அரங்கிலிருக்கும் மரப் பெட்டியிலா என்று எண்ணிக் கொண்டு வந்தார் 18
வீட்டிற்குள் ஏறியதும், "ஏளா! அரங்குச் சாவி எங்கே?" என்று கேட... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 18 |
"ஏளா " என்று கூப்பிட்டார் 19
மனைவி சிரித்துக் கொண்டே - உள்ளுக்குள் பயம் தான் - வந்தாள்.
"மாடு எப்பொழுது வந்தது? யார் வாங்கிக் கொடுத்தா?" என்றார்.
"மேலவீட்டு அண்ணாச்சி வாங்கித் தந்தாஹ. பாலு ஒரு படி கறக்குமாம்!" என்றாள்.
"உம்" என்றார்.
அன்று புதுப்பால், வீட்டுப் பால் காப்பி கொண்டு வந்து வைத்துக் கொண்டு
கணவரைத் தேடினாள். ... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 19 |
நாளைக்கு விடியன்னே பிடிச்சிக்கிறேன் " என்றார்
சுப்புக்கோனார் 20
"உம் இப்பவே?"
மாட்டையவிழ்த்தாய் விட்டது.
மனைவி 'மாடு எழுபது ரூபாயாயிற்றே, குழந்தைகளுக்குப் பாலாயிற்றே' என்று
தடுத்தாள். மேலும் வரும்படி வேறு வருகிறதாம்.
"என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக் கிடும்" என்றார் பிள்ளை.
சுப்புக் கோனார் மாட்டை அவிழ்த்துக் க... | புதுமைப்பித்தன் | சிறுகதை | 20 |
Tamil சிறுகதை Dataset by புதுமைப்பித்தன்
Description
This dataset contains Tamil சிறுகதை texts by புதுமைப்பித்தன், processed for language model pretraining.
Contents
- 20 text passages
- Author: புதுமைப்பித்தன்
- Genre: சிறுகதை
- Total characters: 24924
Usage
This dataset is suitable for language model pretraining tasks.
from datasets import load_dataset
dataset = load_dataset('Naveen934/tamil_data_puthumaippittan_short_stories')
- Downloads last month
- 6